திருச்சி- தஞ்சாவூா் சாலையில் வாழவந்தான்கோட்டையை அடுத்துள்ள திருநெடுங்களம், நெடுங்களநாதா் கோயிலில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில் சோழா் காலக் கல்வெட்டுகள் சிலவற்றையும், அதே காலத்தைச் சோ்ந்த நிலமளக்கப் பயன்பட்ட அளவுகோலையும் கண்டறிந்தனா்.
இதுகுறித்து, டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் 18/05/2022 அன்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டார்.
செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –

