04/10/22 அன்று கலாட்டா தமிழ் அலைவரிசையில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல் இடம்பெற்றது.
சோழர்கள், அவர்தம் வரலாறு, சோழர் மண்ணில் கலைகளின் வளர்ச்சி, சோழச் சிற்பங்களில் இராமாயணமும் மகாபாரதமும், தமிழி மற்றும் வட்டெழுத்து எழுத்துமுறைகள், தம்மை வரலாற்றுப் பாதைக்குக் கொணர்ந்த முதல் சிற்பம், சமீபத்திய திருமங்கலம் திருமழுவுடையநாயனார் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு என்பன பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கினார்.
கூடுதலாக, களப்பிரர் காலம் உண்மையில் இருண்ட காலமா? கருவூர்த் தேவர் யார்? திரைப்படமாக எடுக்கப்பட்ட அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா? என்ற கேள்விகளுக்கான விடைகளையும் நேர்க்காணல் மூலம் அறிந்கொள்ளலாம்.
‘கலாட்டா தமிழ்’ நிகழ்வு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.