தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பசுபதிகோயில் என்ற சிற்றூர். 9-10ஆம் நூற்றாண்டுகளில் புள்ளமங்கலம் என்று அழைக்கப்பட்ட இன்றைய பசுபதிகோயிலில் உள்ளது முதலாம் பராந்தகர் காலத்ததான ஆலந்துறையார் கோயில்.
புள்ளமங்கை ஆலந்துறையார் பற்றிய குறும்படம் ஒன்று ‘மீட்பியம்’ குழுவினரால் வெளியிடப்பட்டது.
ஐந்து பகுதிகளாக வழங்கப்பட்ட காணொலியில், கட்டடக்கலை, சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பு வாய்ந்த அக்கோயில் பற்றிய விரிவான தகவல்களை வழங்கியிருக்கிறார் டாக்டர் மா.இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன்.
காணொலியின் இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.