‘வசந்த அழைப்பு’ – திருச்சிராப்பள்ளி வானொலியில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல்

23/07/2022 அன்று ஒலிபரப்பான திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையின் ‘வசந்த அழைப்பு’ நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் உ.வே.சா. விருது  பெற்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடலாக அமைந்தது.

கண் மருத்துவராகத் தொடங்கி வரலாற்றாய்வாளராக மாறிய தம் வாழ்வின் சுவையான நிகழ்வுகள் பலவற்றை டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆய்வுலகின் முன்னோடிகள், அவர்தம் நூல்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், நூல் வாசிப்பு குறித்த பயனுள்ள தகவல்களை அவர் வழங்கினார்.

கோயில்கள் இன்றி வரலாறு இல்லை; வரலாறு இன்றி நம் அடையாளம் இல்லை; அத்தகைய கோயில்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மக்களின் கடமை என்பதைத் தெளிவாக விளக்கினார்.

‘வசந்த அழைப்பின்’ பதிவை இங்கே கேட்டு மகிழலாம்.

‘ஆடவல்லான்’- இலக்கியப் பேருரை

‘ஆடவல்லான்’ என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் இரா. கலைக்கோவன், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் வழங்கிய இலக்கியப் பேருரையின் பதிவு இது.

ஆடல்கலையின் தனிப்பெரும் தெய்வமாக, சிவன் மாற்றபட்டதும் உயர்த்தப்பட்டதுமான வரலாறு குறித்தும், மற்ற தெய்வங்களின் பெருமைக்குரிய உடைமையாக இருந்த ‘ஆடல்கலையின் மணிமகுடம்’ சிவனாரின் தலையில் பொருத்தப்பட்டதுமான நீண்ட வரலாற்றை, நற்றமிழில் விளக்கமுற வழங்கியிருக்கிறார் டாக்டர். கலைக்கோவன்.

10ஆம் நூற்றாண்டுத் தமிழகக் கோயில் படிமவியலில் சிவனுடைய ஆடல், ‘ஆனந்த தாண்டவம்’ என்று பார்போற்றும் வியத்தகு ஆடல் தோற்றநிலையாக மாறும் பரிணாம வளர்ச்சியை, மெய்நிகர்ப் பயணமாகக்  காலக்கருவியில் அமரச்செய்து, காட்டிச் செல்கிறார்.

‘ஆடவல்லான்’ என்ற டாக்டர். இரா. கலைக்கோவனின் வானொலிப் பொழிவு, அவர்தம் கருத்துக்களோடு தொடர்புடைய தமிழகக் கோயில் சிற்பங்களின் பின்னணியில், குறும்படம்போல் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

சான்றோர் சிந்தனை – அறிஞர் வ.சுப. மாணிக்கனார்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சிக்காக, அறிஞர் வ. சுப. மாணிக்கனார் பற்றி, டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய வானொலிப் பொழிவின் பதிவு இது. பொழிவு 4 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

தமிழமுதம்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்காக, ‘தமிழமுதம்’ என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய பொழிவின் பதிவுகளை இப்பகுதியில் கேட்கலாம்.

‘அமுது’, ‘மடை’, ‘பானை’, ‘குடம்’, ‘கலம்’, ‘மணி’ போன்ற பழந்தமிழ்ச்சொற்கள், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளமையைச் சான்றுகளுடன், சுவைபட விளக்கியுள்ளார்.

தமிழர் வணிகச் சிறப்பு, மிகப் பழங்காலந்தொட்டே பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டமை, தமிழகத்து விளைபொருட்கள், வணிகக் குழுக்கள் என்று பரந்தூபட்ட செய்திகளை உள்ளடக்கிய பொழிவுகள் இவை.

அமுதம் 1

அமுதம் 2

அமுதம் 3

அமுதம் 4

அமுதம் 5

அமுதம் 6

அமுதம் 7

அமுதம் 8

அமுதம் 9

சான்றோர் சிந்தனை – டாக்டர் மா. இராசமாணிக்கனார்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்காக, சான்றோர் சிந்தனை என்ற நிகழ்ச்சியில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் பற்றி டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய வானொலிப் பொழிவின் பதிவு இது. பொழிவு 5 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5