அல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் புதிய கல்வெட்டுகள்


திருச்சிராப்பள்ளி கரூர் சாலையில் உள்ள அல்லூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது முதலாம் பராந்தகச் சோழர் காலத்ததான பசுபதீசுவரர் கோயில்.

அக்கோயிலில், அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா், புதிய கல்வெட்டு ஒன்றையும் ஏற்கனவே படியெடுக்கப்பட்டப் பழைய கல்வெட்டுகளின் பிற பகுதிகளையும் கண்டறிந்தனர்.

கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

சிராப்பள்ளியில் உலகச் சுற்றுலா நாள் நிகழ்வுகள்

உலகச் சுற்றுலா நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் ஜமால் முகம்மது கல்லூரியுடன் இணைந்து, இந்தியத் தொல்லியல் துறை (திருச்சி வட்டம்), பல்வேறு நிகழ்ச்சிகளைத் திருச்சிராப்பள்ளியில நடத்தியது.

அதன் ஒரு பகுதியாக, மலைக்கோட்டையின் கீழ்க்குடைவரையில் ‘தென்தமிழகத்தில் மரபுவளங்கள்’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது.

முன்னதாக நடந்த தொடக்க நிகழ்வில், டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், மரபுவளங்கள் மற்றும் சுற்றுலா குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.

செய்திகளைத் தாங்கிய இதழ்களின் வெளியீடு இணைக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி புத்தகத் திருவிழாவில் விருது

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும் தேசிய நூல் அறக்கட்டளையும் (National Book Trust of India) இணைந்து நடத்தும் ‘புத்தகத் திருவிழா’, திருச்சிராப்பள்ளி ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இந்நூல் கண்காட்சியின் இரண்டாம் நாளான செப்டம்பர் 17 அன்று, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கு, அவர்தம் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி நிகழ்ச்சி அமைப்பாளர்களால் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த செய்திக் குறிப்பு