மையத்தின் புதிய நூல்கள்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் 2023இல் மூன்று புதிய நூல்களை வெளியிட்டுள்ளது. அல்லூர், வடகுடி, திருமங்கலம் சோழர் தளிகள் பற்றி ஒரு நூலும், திருநெடுங்களம், திருவாசி, நகர், கண்ணனூர் சோழர் தளிகள் பற்றி ஒரு நூலும், வரலாறு ஆய்விதழின் ஒருங்கிணைந்த தொகுதியும் (31-32) தற்போது வெளியாகியுள்ளன. 1993 தொடங்கி 30 ஆண்டுகளில் 30 தொகுதிகளாக மலர்ந்திருக்கும் ஆய்விதழ் வரலாறு என்பது வரலாற்றார்வலர்கள் அறிந்ததே.

அல்லூர் வடகுடி திருமங்கலம் சோழர் தளிகள் மூன்று

அல்லூர் நக்கன், வடகுடி மகாதேவர், திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில்களின் முழுமையான படப்பிடிப்பு, கல்வெட்டுத் தரவுகள், சிற்பச் சிறப்புகள், கோயிலமைப்பு ஆகியவற்றுடன் களஆய்வுகளில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளின் பாடங்களும் கொடும்பாளூர் வேளிர் மரபுவழிப் பட்டியலும் இணைக்கப்பட்ட நூல் இது.

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் காலத் தளிகள் ஐந்து

திருநெடுங்களம் நெடுங்களநாதர், திருவாசி மாற்றுரைவரதீசுவரர், நகர் அப்ரதீசுவரர், கண்ணனூர்ப் போசளீசுவரர், முக்தீசுவரர் கோயில்களின் கட்டமைப்பு, சிற்பச் செழிப்பு, கல்வெட்டுச் சிறப்புப் பேசும் தரவுப் பெட்டகம். இக்கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய தரவுகளும் கோயில்களின் தனிச் சிறப்புகளும் நூலை வளப்படுத்தியுள்ளன.

வரலாறு ஆய்விதழ்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுமுடிவுகளையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 1993 ஆகஸ்டு 15ஆம் நாள் தோன்றிய ஆய்விதழ் ‘வரலாறு’. 2021, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த இதழாக வரலாறு 31-32 தொகுதி அச்சில் வந்துள்ளது.

வரலாறு 31-32

நூல்கள் பெற விழைவோர் தொடர்புகொள்ள –

சி 87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 600 018

தொடர்பு எண்: +91 89036 11790

பின்னூட்டமொன்றை இடுக