‘வசந்த அழைப்பு’ – திருச்சிராப்பள்ளி வானொலியில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல்

23/07/2022 அன்று ஒலிபரப்பான திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையின் ‘வசந்த அழைப்பு’ நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் உ.வே.சா. விருது  பெற்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடலாக அமைந்தது.

கண் மருத்துவராகத் தொடங்கி வரலாற்றாய்வாளராக மாறிய தம் வாழ்வின் சுவையான நிகழ்வுகள் பலவற்றை டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆய்வுலகின் முன்னோடிகள், அவர்தம் நூல்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், நூல் வாசிப்பு குறித்த பயனுள்ள தகவல்களை அவர் வழங்கினார்.

கோயில்கள் இன்றி வரலாறு இல்லை; வரலாறு இன்றி நம் அடையாளம் இல்லை; அத்தகைய கோயில்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மக்களின் கடமை என்பதைத் தெளிவாக விளக்கினார்.

‘வசந்த அழைப்பின்’ பதிவை இங்கே கேட்டு மகிழலாம்.

தமிழக அரசின் உ.வே.சா. விருது – 2021

தமிழ்நாடு நாள் விழா ஜூலை 18, 2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கு, அவர்தம் சீரிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது பெற்றமை குறித்து, திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையில், 19/07/2022 அன்று டாக்டர் இரா. கலைக்கோவன் உரையாற்றினார். அந்த உரையின் பதிவை இங்கே கேட்கலாம்.