பழுவேட்டரையர்கள் யார்?

அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ புதினம் திரைப்படமாக வெளிவந்ததைத் தொடர்ந்து, சோழர்கால வரலாற்று மாந்தர்கள் குறித்த தேடல்கள் தொடர்கின்றன. அப்படிப்பட்ட மாந்தர்களுள் ஒருவர் பெரிய பழுவேட்டரையர்.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?’ என்ற இந்து தமிழ் வலையொலிப் பக்கத்தில், பழுவேட்டரையர் குறித்து டாக்டர் இரா. கலைக்கோவன்-

“பெரிய, சின்னப் பழுவேட்டரையர்கள் என்று அண்ணனும் தம்பியுமாக இருவர் இக்கதையில் குறிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதைக்களம் சுந்தரசோழர் காலத்தில் அமைகிறது. அவர் ஆட்சி ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அமைந்தது. அப்போது பழுவூர் மன்னராக இருந்த பழுவேட்டரையர் மறவன்கண்டன். அவருக்குத் தம்பி யாருமில்லை. உத்தமசோழர் காலம்வரை மறவன்கண்டனே ஆட்சியில் இருந்ததைப் பழுவூர்க் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், கதையில் பெரியபழுவேட்டரையர் உயிர் துறப்பதாகவும் சின்னப்பழுவேட்டரையர் பொறுப்பு நீங்குவதாகவும் கல்கி எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர், பழுவேட்டரையர்கள் குறித்த விளக்கமான வரலாற்றுத் தகவல்களை -‘பழுவேட்டரையர்கள் யார்?’ என்ற கட்டுரையில் வழங்கியிருக்கிறார். அக்டோபர் 2, 2022 அன்று வந்த  ‘இந்து தமிழ் திசை’ இதழில் கட்டுரை வெளியானது.

முழுமையான கட்டுரையைப் படித்திட, இதழின் இணைய இணைப்பை இங்கே காணலாம்-

‘பழுவேட்டரையர்கள் யார்?’

கட்டுரையின் வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.

அல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் புதிய கல்வெட்டுகள்


திருச்சிராப்பள்ளி கரூர் சாலையில் உள்ள அல்லூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது முதலாம் பராந்தகச் சோழர் காலத்ததான பசுபதீசுவரர் கோயில்.

அக்கோயிலில், அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா், புதிய கல்வெட்டு ஒன்றையும் ஏற்கனவே படியெடுக்கப்பட்டப் பழைய கல்வெட்டுகளின் பிற பகுதிகளையும் கண்டறிந்தனர்.

கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில்,  தஞ்சாவூரிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பசுபதிகோயில் என்ற சிற்றூர்.  9-10ஆம் நூற்றாண்டுகளில் புள்ளமங்கலம் என்று அழைக்கப்பட்ட இன்றைய பசுபதிகோயிலில் உள்ளது முதலாம் பராந்தகர் காலத்ததான ஆலந்துறையார் கோயில். 

புள்ளமங்கை ஆலந்துறையார் பற்றிய குறும்படம் ஒன்று ‘மீட்பியம்’ குழுவினரால் வெளியிடப்பட்டது.

ஐந்து பகுதிகளாக வழங்கப்பட்ட காணொலியில், கட்டடக்கலை, சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்ற மூன்று நிலைகளிலும்  சிறப்பு வாய்ந்த அக்கோயில் பற்றிய  விரிவான தகவல்களை வழங்கியிருக்கிறார்  டாக்டர் மா.இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன். 

காணொலியின் இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.



சிராப்பள்ளியில் உலகச் சுற்றுலா நாள் நிகழ்வுகள்

உலகச் சுற்றுலா நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் ஜமால் முகம்மது கல்லூரியுடன் இணைந்து, இந்தியத் தொல்லியல் துறை (திருச்சி வட்டம்), பல்வேறு நிகழ்ச்சிகளைத் திருச்சிராப்பள்ளியில நடத்தியது.

அதன் ஒரு பகுதியாக, மலைக்கோட்டையின் கீழ்க்குடைவரையில் ‘தென்தமிழகத்தில் மரபுவளங்கள்’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது.

முன்னதாக நடந்த தொடக்க நிகழ்வில், டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், மரபுவளங்கள் மற்றும் சுற்றுலா குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.

செய்திகளைத் தாங்கிய இதழ்களின் வெளியீடு இணைக்கப்பட்டுள்ளது.

‘கலாட்டா தமிழ்’ – நேர்க்காணல்

04/10/22 அன்று கலாட்டா தமிழ் அலைவரிசையில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல் இடம்பெற்றது.

சோழர்கள், அவர்தம் வரலாறு, சோழர் மண்ணில் கலைகளின் வளர்ச்சி, சோழச் சிற்பங்களில் இராமாயணமும் மகாபாரதமும், தமிழி மற்றும் வட்டெழுத்து எழுத்துமுறைகள், தம்மை வரலாற்றுப் பாதைக்குக் கொணர்ந்த முதல் சிற்பம், சமீபத்திய திருமங்கலம் திருமழுவுடையநாயனார் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு என்பன பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கினார்.

கூடுதலாக, களப்பிரர் காலம் உண்மையில் இருண்ட காலமா? கருவூர்த் தேவர் யார்? திரைப்படமாக எடுக்கப்பட்ட அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா? என்ற கேள்விகளுக்கான விடைகளையும் நேர்க்காணல் மூலம் அறிந்கொள்ளலாம்.

‘கலாட்டா தமிழ்’ நிகழ்வு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.