அழுந்தூரின் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு

“சில சுவையான கதைகள் வரலாறு போல வாழ்வதும் சில ஊர்களின் வரலாறு கதைகளைப் போல நிகழ்வுகளின் தொடரிணைப்பால் உருவாவதும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன”, என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் 12.03.2023 அன்று ‘வரலாறு ஒரு கதை போல…’ என்ற தலைப்பில் பதிவான அவருடைய கட்டுரை, இப்படித்தான் தொடங்குகிறது.

திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் உள்ள அழுந்தூர் என்ற சிற்றூரில் சிதைந்திருந்த பழங்காலக் கோயிலையும், அங்குப் புதைந்திருந்த சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் சமீபத்தில் ஆய்வு செய்தனர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர். அந்த ஆய்வுக் களம் கூட்டிச்சென்ற பாதைகளும், பாதைகள் காட்டிய சான்றுகளும், சான்றுகளால் கிட்டிய அழுந்தூரின் வரலாறும் பற்றியதுதான் ‘வரலாறு ஒரு கதை போல…’.

அழுந்தூர் கண்டுபிடிப்புகள் குறித்து நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-

பல்கலைக்கழக மானியக்குழுவின் தமிழ் ஆய்விதழ்ப் பட்டியல் 2023- தொடர்ந்து இடம்பெறும் ‘வரலாறு’ ஆய்விதழ்



இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), ஆய்வுப் படைப்புகளின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, நவம்பர் 2018இல் ‘Consortium for Academic and Research Ethics’ (CARE)/ சிஎஆர்இ-UGC என்ற அமைப்பை நிறுவியது.

முனைவர் பட்டம் பெறும்முன் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வுத் தாள்களைப் பதிப்பிக்க, தரமான ஆய்விதழ்களை நாடுவர். அத்தகைய தரமான ஆய்விதழ்களின் பட்டியலை சிஎஆர்இ (CARE), ஆண்டிற்கு இருமுறை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 

அப்பட்டியலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் ஆண்டு ஆய்விதழ் ‘வரலாறு’ செப்டம்பர் 2019 முதல் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023ஆம் ஆண்டிற்கான பட்டியலிலும் ‘வரலாறு’ ஆய்விதழ் தொடர்கிறது.