அத்யந்தகாமம்

மாமல்லைக் கோயில் தொகுதியில் வியக்கவைக்கும் சாதனைகள் புரிந்தவர் இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மன் என்பதையும், தர்மராஜ ரதம் அவரால் உருவாக்கப்பட்டது என்பதையும் கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பச் சான்றுகளால் உறுதிசெய்து 2004இல் டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்ட நூல் ‘அத்யந்தகாமம்’. தர்மராஜ ரதத்தில் கிடைத்த 39 வடமொழிக் கல்வெட்டுக்களில் இரண்டு, ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’ என்று அக்கோயிலை அடையாளப்படுத்துகின்றன. ஆக, தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கிய பல்லவ அரசர் வைத்த பெயர் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’.

தமிழ்நாட்டுக் கலை வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையெனக் கருதப்படும் தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தைப்’ பற்றி, 30.07.2005 அன்று திருவெறும்பியூரில் நடைபெற்ற ‘ஆவணம்’ இதழ் 16இன் வெளியீட்டு விழாவில் ‘அத்யந்தகாமம்’ என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் சொற்பொழிவு நிகழ்த்தியிருந்தார். அப்பொழிவின் அச்சுரு ‘ஆவணம் 17, 2006’ இதழில் வெளிவந்தது.

அக்கட்டுரை, அனைவரும் படித்துப் பயனுறும் வண்ணம், பதிவிறக்கம் செய்துகொள்ளும் கையடக்க ஆவணமாக இங்கே வழங்கப்பட்டுள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக