திருவள்ளூர் மாவட்டம் விசாலீசுவரர் கோயிலில் புதிய கல்வெட்டு

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள், காலத்தால் முற்பட்ட கட்டுத்தளிகள் பற்றிய ஆய்வுநூலொன்றை உருவாக்கி வருகிறார்கள். அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் விளக்கணாம்பூண்டியிலுள்ள விசாலீசுவரர் கோயிலில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டபோது, மைய ஆய்வாளர் மருத்துவர் ச. சுந்தரேசன், பொதுக்காலம் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயாதித்த வாணராயர் என்ற பாண அரசரின் புதிய கல்வெட்டொன்றைக் கண்டறிந்தார்.

கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இச்செய்தி குறித்த முழு தகவல்களுக்கு, மின்னிதழ் இணைப்பைக் கீழே காணலாம்-

விசாலீஸ்வரா் கோயிலில் பாண அரசரின் கல்வெட்டு!

தகவல்களைத் தாங்கிய நாளிதழ்ச் செய்திக்குறிப்பு

பின்னூட்டமொன்றை இடுக