இருண்ட காலமா?

இருண்ட காலமா?

இருண்டகாலத்தின் பிடியிலிருந்து தமிழகம் விடுதலையான முதல் 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக் கட்டட, சிற்பக் கலைகளில் நிகழ்ந்த வியத்தகு மாற்றங்கள் திடீரென நிகழ்ந்தவையாக இருக்கமுடியாது. கல் எனும் ஊடகமாற்றம் புதியதென்றாலும் அதன் பின்னணியிலான கலைச் சிந்தனைகளும் காட்சிப்படுத்தல்களும் சங்க, காப்பியக் காலப் பதிவுகளின் விரிவாக்கங்களாகவே உள்ளமை வெளிப்படை.

டாக்டர் இரா. கலைக்கோவன்

மா. இராசமாணிக்கனார்

மா. இராசமாணிக்கனார்

இந்திய இலக்கியச்‌ சிற்பிகள்‌ வரிசையில்‌ எழுதப்பட்டுள்ள இந்த நூல்‌, முனைவர்‌ மா இராசமாணிக்கனாரின்‌ வாழ்க்கை வரலாற்றையும்‌ அவருடைய முப்பத்தேழு ஆண்டுக்‌ காலப்‌ படைப்புகளையும்‌ வளரும்‌ தலைமுறையினர்‌ அறிந்துகொள்ள வேண்டும்‌ என்ற கருத்துடன்‌ உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கியம்‌, இலக்கணம்‌, வரலாறு, சமயம்‌, கோயிற்கலைகள்‌, கல்வெட்டு, புதினம்‌, சிறுவர்‌ இலக்கியம்‌, வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு துறைகளில்‌ நூல்களைப்‌ படைத்துள்ள இப்பெருமகனார்‌ சிறந்த சிந்தனையாளராக நேரிய வாழ்வு வாழ்ந்தவர்‌.

டாக்டர் இரா. கலைக்கோவன்

திருவானைக்காவில் ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிப்பு

சமீபத்தில் திருவானைக்கா பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட முசிறி அரசினா் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியா் அர.அகிலா, திருவானைக்கா கீழ உள்வீதியிலுள்ள ஆனந்த கணபதி கோயில் நுழைவு வாயிலின் வெளிச்சுவரில் பக்கத்திற்கொன்றாக இரண்டு ‘தலைப்பலி’ சிற்பங்கள் இணைத்துக் கட்டப்பட்டுள்ளதைக் கண்டறிந்தாா்.

இச்சிற்பங்களை ஆய்வு செய்த டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டர் இரா. கலைக்கோவன், அவை பொதுக்காலம் 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல தகவல்களுடன் நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு