திருவானைக்காவில் ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிப்பு

சமீபத்தில் திருவானைக்கா பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட முசிறி அரசினா் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியா் அர.அகிலா, திருவானைக்கா கீழ உள்வீதியிலுள்ள ஆனந்த கணபதி கோயில் நுழைவு வாயிலின் வெளிச்சுவரில் பக்கத்திற்கொன்றாக இரண்டு ‘தலைப்பலி’ சிற்பங்கள் இணைத்துக் கட்டப்பட்டுள்ளதைக் கண்டறிந்தாா்.

இச்சிற்பங்களை ஆய்வு செய்த டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டர் இரா. கலைக்கோவன், அவை பொதுக்காலம் 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல தகவல்களுடன் நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு

பின்னூட்டமொன்றை இடுக