நான்காம் புத்தகத் திருவிழா 2025, நாகபட்டினம்


நாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் மூன்றாண்டுகளாக நடத்தி வரும் புத்தகத் திருவிழாவின் நான்காம் ஆண்டு (2025) நிகழ்வுகள், ஆகஸ்டு 01 முதல் 11 வரை நடைபெற்றன. எட்டாம் நாளான 08.08.25 அன்றைய கருத்தரங்கில் டாக்டர் இரா. கலைக்கோவன், ‘நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள்’ பற்றிய பொழிவை நிகழ்த்தினார்.

அன்றைய காணொலிப் பொழிவின் இணையப் பதிவை இங்கு காணலாம். 

முதலாம் இராஜேந்திரரின் கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் பற்றி வரலாற்றுத் துறை அறிஞர்களின் கருத்துகள் தாங்கிய காணொலி, இந்து இதழின் மின்தளத்தில் 26/07/25 அன்று பதிவானது. அதில், முதலாம் இராஜராஜருக்கும் வானவன்மாதேவிக்கும் பிறந்த திருமகன் முதலாம் இராஜேந்திரர், தமிழ்நாட்டை மிக உயர்ந்த நிலைக்குத் தம்முடைய ஆட்சிக் காலத்தில் கொண்டு சென்ற வரலாறையும், வேறு எந்த இந்திய மன்னரும் நிகழ்த்திடாத அளவுக்குக் கடல் போர்கள் நிகழ்த்தி வெற்றி கண்ட முதல் இராஜேந்திரருடைய சிறப்பையும் சுருக்கமாக விளக்கினார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள்

நாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நேர்க்காணலில், நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள் குறித்த செய்திகளை டாக்டர் இரா. கலைக்கோவன் விரிவாக விளக்கினார். நிகழ்ச்சி, அம்மாவட்ட நிர்வாகத்தின் வலையொலிப் பக்கத்தில் 10.07.2025 அன்று பதிவிடப்பட்டது.

பேசும் தலைமை/ நியூஸ் 7 தமிழ்

25.06.2017 அன்று ‘நியூஸ் 7 தமிழ்’ அலைவரிசையில் ஒளிபரப்பான டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்காணலை இங்கே காணலாம்.