
கங்கை கொண்ட சோழபுரம் பற்றி வரலாற்றுத் துறை அறிஞர்களின் கருத்துகள் தாங்கிய காணொலி, இந்து இதழின் மின்தளத்தில் 26/07/25 அன்று பதிவானது. அதில், முதலாம் இராஜராஜருக்கும் வானவன்மாதேவிக்கும் பிறந்த திருமகன் முதலாம் இராஜேந்திரர், தமிழ்நாட்டை மிக உயர்ந்த நிலைக்குத் தம்முடைய ஆட்சிக் காலத்தில் கொண்டு சென்ற வரலாறையும், வேறு எந்த இந்திய மன்னரும் நிகழ்த்திடாத அளவுக்குக் கடல் போர்கள் நிகழ்த்தி வெற்றி கண்ட முதல் இராஜேந்திரருடைய சிறப்பையும் சுருக்கமாக விளக்கினார் டாக்டர் இரா. கலைக்கோவன்.
