
மறைந்த நகரம் அல்லது மொஹெஞ்சொதரோ
அழிந்த பழைய நகரங்கள் பல நம் தமிழகத்தில் உண்டு. அவை கொற்கை, காயல், புகார், உறையூர், வஞ்சி, மாமல்லபுரம் முதலியன. அவற்றில் மாணவர்க்கு ஒரு பற்று உண்டாகவும், தமிழ்நாட்டுப் பண்டை வரலாற்றின் பெரும்பகுதி இன்றளவும் மண்ணில் புதையுண்டுதான் கிடக்கின்றது என்பதை நம் சிறார் அறிந்தின்புறவும், தமிழகத்துச் சிறு மாணவர்க்கு எளிதில் விளங்கும்பொருட்டுத் தெள்ளிய எளிய நடையில் எழுதப்பட்டது இந்நூல்.

