சோழர் காலத் தமிழ்நாட்டில் இருந்த மூன்று வகை ஊராட்சிகள்- பிராமணர் குடியிருப்புகளுக்கான பிரமதேய மகாசபை, வணிகர் பணிகளுக்கான நகரத்தார் கூட்டமைப்பு, வேளாண் பெருமக்கள் வாழ்ந்த ஊர்களுக்குரிய ஊரார் அவை என்பன.
இம்மூன்று உள்ளாட்சிகளில், சங்க காலம்முதலே நன்கு அறியப்பட்ட ஊரார் கூட்டாட்சி சோழர்காலத்திலும் தொடர்ந்துச் சிறப்புடன் இயங்கிவந்தமைக்குச் சோழர் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் ஏப்ரல் 09, 2023 அன்று வெளியான டாக்டர் இரா. கலைக்கோவனின் ‘சோழர் கால ஊரார்’ என்ற தலைப்பிலான கட்டுரை- ஊரவைகளின் பணிகள், அவை தனித்து இயங்கியபோதும் தேவைக்கேற்பத் தத்தம் ஊரை அடுத்திருந்த பிரமதேய சபை, நகரத்தார் அவையுடன் இணைந்து செயற்பட்டச் சூழல், ஊரில் நில உரிமை கொண்டிருந்தவர்கள் தம் பெயருடன் இணைத்துக் கொண்ட சிறப்பொட்டுக்கள் போன்ற சுவையான பலச் செய்திகளை விளக்குகிறது.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-
