சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)

யான் 1941ஆம் ஆண்டுமுதல் செய்துவந்த “பெரிய புராண ஆராய்ச்சி”ச் சம்பந்தமான குறிப்புகள் பல இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சிக் குறிப்புகள் 1942 முதல் யான் செய்துவந்த பெரிய புராண ஆராய்ச்சிச் சொற்பொழிவுகளில் குறிக்கப் பெற்றுத் தமிழ்ப் பெரும் புலவர் பலரிடம் பாராட்டுப் பெற்றனவாகும்.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

காவியம் செய்த கவியரசர்

சமயம் சார்ந்த மூடநம்பிக்கைகளும் சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத்தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும், தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தம் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர். தாமுண்டு தம் குடும்பம் உண்டு தம் வேலை உண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை.

டாக்டர் இரா. கலைக்கோவன்

நாட்டுக்கு நல்லவை

‘பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால் தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார்.

டாக்டர் இரா. கலைக்கோவன்