


முசிறி அருகே காவிரி ஆற்றங்கரையில் பெரிய இலிங்கமும் கல்வெட்டும் சிற்பங்களும் இருந்த செய்தியறிந்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன், மையத்தைச் சேர்ந்த கல்வெட்டாய்வாளர்கள் பேராசிரியர் மு. நளினி மற்றும் பேராசிரியர் அர. அகிலா ஆகியோருடன் அவ்விடம் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு கூடியிருந்த செய்தியாளர்களுடன் அவர் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கிடைக்கப் பெற்ற எழில்மிகு ஆலமர் அண்ணல் மற்றும் வீணாதாரர் சிற்பங்கள், முற்சோழர் காலத்தவை என்று கூறிய டாக்டர் கலைக்கோவன், கடினப் பாதையில் சென்று ஆய்வு நிகழ்த்திட, அன்பும் ஆர்வமும் கொண்டு ஊரார் செய்த உதவிகளை நன்றியுடன் குறிப்பிட்டார்.


டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்த விரிவான தகவல்களுடன் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காணொலிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
Musiri official Updates தளத்தில் –
Polimer News வெளியிட்ட விரிவான செய்தி இங்கே-

ஆற்றங்கரையில் 10-ம் நூற்றாண்டு சோழர் கால சிற்பங்கள்.. ஆய்வாளர்கள் சொன்ன தகவல்..
