
உலக மரபுரிமை வாரத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் இணைந்து வழங்கிய, ‘பாரம்பரியப் பெட்டகங்கள்’ என்ற சிறப்புத் தொடர் நிகழ்ச்சி, திருச்சிராப்பள்ளி பண்பலை 102.1இல் 19.11.25 முதல் 25.11.25 வரை ஒலிபரப்பானது. பெருமைக்குரிய பழங்கோயில்கள், கோட்டைகள் மற்றும் பழங்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய செய்திகளைத் தம்முடைய வரலாற்றாய்வுக் குழுவினருடன், சுவையான கலந்துரையாடலாக டாக்டர் இரா. கலைக்கோவன் அமைத்திருந்தது மேலும் ஆர்வமூட்டியது.
ஏழு நாள் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவினைக் கீழே இணைப்புகளில் கேட்டு மகிழலாம்.
1. அப்பருக்குச் சோறூட்டிய அழகன் கோயில்– திருப்பைஞ்ஞீலி
கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் அர. அகிலா, பேராசிரியர் மு. நளினி

2. பெருந்திருக்கோவிலும் பாறை அகழ்வுகளும் –திருவெள்ளறை
கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

3. விண்வருடும் இராஜேந்திரப் பெருமிதம் –கங்கை கொண்ட சோழபுரம்
கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

4. சிற்பச் செழுமையின் சிகரம்– புள்ளமங்கலத்து ஆலந்துறையார்
கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர் செல்வி அருண், பேராசிரியர் மு. நளினி

5. தேவன் கோவிலும் தேவியர் கற்றளிகளும் – திருவையாறு
கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

6. குன்றில் தோன்றிய கோவில்கள் – திருமெய்யம்
கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர் செல்வி அருண், பேராசிரியர் அர. அகிலா

7. எங்கும் எதிலும் மரபுரிமை – பழங்காலச் சின்னங்கள்
கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி, பேராசிரியர் அர. அகிலா




