மரபுரிமை வாரச் சிறப்புத் தொடர்- ‘பாரம்பரியப் பெட்டகங்கள்’

உலக மரபுரிமை வாரத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் இணைந்து வழங்கிய, ‘பாரம்பரியப் பெட்டகங்கள்’ என்ற சிறப்புத் தொடர் நிகழ்ச்சி, திருச்சிராப்பள்ளி பண்பலை 102.1இல் 19.11.25 முதல் 25.11.25 வரை ஒலிபரப்பானது. பெருமைக்குரிய பழங்கோயில்கள், கோட்டைகள் மற்றும் பழங்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய செய்திகளைத் தம்முடைய வரலாற்றாய்வுக் குழுவினருடன், சுவையான கலந்துரையாடலாக டாக்டர் இரா. கலைக்கோவன் அமைத்திருந்தது மேலும் ஆர்வமூட்டியது.

ஏழு நாள் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவினைக் கீழே இணைப்புகளில் கேட்டு மகிழலாம்.

1. அப்பருக்குச் சோறூட்டிய அழகன் கோயில்திருப்பைஞ்ஞீலி

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் அர. அகிலா, பேராசிரியர் மு. நளினி

2. பெருந்திருக்கோவிலும் பாறை அகழ்வுகளும்திருவெள்ளறை

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

3. விண்வருடும் இராஜேந்திரப் பெருமிதம்கங்கை கொண்ட சோழபுரம்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

4. சிற்பச் செழுமையின் சிகரம்புள்ளமங்கலத்து ஆலந்துறையார்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர் செல்வி அருண், பேராசிரியர் மு. நளினி

5. தேவன் கோவிலும் தேவியர் கற்றளிகளும் – திருவையாறு

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

6. குன்றில் தோன்றிய கோவில்கள் – திருமெய்யம்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர் செல்வி அருண், பேராசிரியர் அர. அகிலா

7. எங்கும் எதிலும் மரபுரிமை – பழங்காலச் சின்னங்கள்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி, பேராசிரியர் அர. அகிலா

திருவானைக்காவில் ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிப்பு

சமீபத்தில் திருவானைக்கா பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட முசிறி அரசினா் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியா் அர.அகிலா, திருவானைக்கா கீழ உள்வீதியிலுள்ள ஆனந்த கணபதி கோயில் நுழைவு வாயிலின் வெளிச்சுவரில் பக்கத்திற்கொன்றாக இரண்டு ‘தலைப்பலி’ சிற்பங்கள் இணைத்துக் கட்டப்பட்டுள்ளதைக் கண்டறிந்தாா்.

இச்சிற்பங்களை ஆய்வு செய்த டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டர் இரா. கலைக்கோவன், அவை பொதுக்காலம் 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல தகவல்களுடன் நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு

திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில் சோழா்காலக் கல்வெட்டுகள்


திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ளது திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் அக்கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்தனர்.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த பல வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வரலாற்றுத் தகவல்களுடன் செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –