ராச்சாண்டார் திருமலைக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள்

திருச்சிராப்பள்ளி-அரவக்குறிச்சி பெருவழியில் உள்ள விரையாச்சிலை நாயனார் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி தலைமையில், முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலாவும், தேசியக் கல்லூரி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் செல்வி ஹேமலைலாவும் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் பயனாகப் படியெடுக்கப்படாத பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து, அவை மூன்றாம் குலோத்துங்கர் மற்றும் மூன்றாம் இராஜராஜர் காலத்தவை என அவர்கள் தெளிவுபடுத்தினர்.

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ராச்சாண்டார் திருமலை என்னும் சிற்றூரின் சிறு குன்றின்மீது அமைந்துள்ள இந்தச் சோழர் காலக் கோயில், கல்வெட்டுகளில் குன்றணிநல்லூரென்று அழைக்கப்பட்டுள்ளது.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், ராச்சாண்டார் திருமலைக் கோயில் பொதுக்காலம் 13 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் இறுதிக் கட்டத்தில் உருவாகியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இச்செய்தி குறித்த முழு தகவல்களுக்கு, மின்னிதழ் இணைப்பைக் கீழே காணலாம்-

ராச்சாண்டார் திருமலைக் கோயிலில் சோழர்கால வரியினங்களை அறியும் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்ச் செய்திக்குறிப்புகள் –

பின்னூட்டமொன்றை இடுக